காதுல பூ கா.சிவத்தம்பி

யார் வேண்டுமானாலும் - எது வேண்டுமானாலும் சொல்லலாம் ; இப்படி ஒரு நிலை இன்று தமிழுக்கு....... 

தமிழன் என்றதுமே, கடைநிலைச்சிங்களவன்கூட காறித்துப்புகிறான்.

அவன் காறித்துப்புவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

சொந்த இனத்தையே கருவறுப்பதில், எதிரிக்குத் துணை நிற்கும் எட்டப்பர்கள் பெருகிவிட்ட இனமாகிவிட்டது இன்று தமிழினம்!

அடடா! காட்டிக்கொடுப்பில்தான் எத்தனை ரகம்?

விட்டால், ‘ காட்டிக்கொடுப்பது எப்படி?’ என்று ஒரு புத்தகமே போட்டு விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. 

அறப்படித்த பேராசிரியர்கள் தொடங்கி, அறவே படியாத தற்குறிகள்வரை, தினிசுதினிசாகக் காட்டிக்கொடுக்கிறார்கள்.  

என்ன.... இவர்களுக்கிடையில் ஒரேயொருவித்தியாசம்.....! 

பாமரன் வெளிப்படையாகவே ,எதிரிபோடும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டதைக்காட்டிக்கொள்கிறான் ;  

ஆனால், இந்தப் பெரீ...ய பேராசியர்களோ, தாம் ஏதோ தமிழினத்தையும் தமிழ்மொழியையும் தாங்குவதற்காகத்தான் இதெல்லாம் செய்கிறோம் என்பதுபோலப் பாவனை காட்டிக்கொண்டே, எதிரியின் கால்களைக் கழுவியேகுடித்துவிடுகிறார்கள்.

தாம் கற்றதமிழை, நூல்களாகவும்,ஒலிநாடாக்களாகவும் தமிழர்களிடமே விற்றுப்பணமாக்கியது போதாதென்று தமிழ்மக்கள் தம்மில் வைத்திருக்கும் மதிப்பையும் விற்றுப் பணமாக்கமுனைகிறார்கள்.

தாம் சொன்னால், அத்துணைத்தமிழர்களுமே, வாய்பொத்தி மௌனிகளாகத் தலையாட்டிக்கொண்டேயிருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.

அப்படி ஒருநிலைமை இருந்தது ஒருகாலம்.... உண்மைதான்!

ஆனால், அது மலையேறியே விட்டது எமது தேசியத்தலைவரின் வருகையின்பின்...

இதை நம்பமறுக்கிறது இவர்களின் நப்பாசை!

நமது ஆயுதங்கள், மௌனிக்கப்பட்டனவேயொழிய மரணிக்கவில்லை.

இதேபோலத்தான், நம்தலைவரும்.

மௌனித்திருக்கிறார் ; உரியநேரம்வரும்போது வெளிப்பட்டேதீருவார்.

இன்று பலர், மௌனத்துக்கும் மரணத்துக்கும் டையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளமுடியாதமையினாலேயே இந்த ஆட்டம்போடுகின்றனர்.

ஏன்? சிங்களத்துக்கெதிராக இயங்கும் சிங்களவர்இல்லையா என்று இதில் ஒரு கேள்வி எழலாம்...

இருக்கிறார்கள்..... அங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

ஆனால், அவர்கள் பெரும்பாலும், தமிழர்தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டமையினாலேயே சிங்களத்தை எதிர்க்கிறார்கள். உதாரணத்துக்கு, Dr. பிரையன் செனிவிரத்னா,Dr. விக்கிரமபாகு கருணரத்னா ஆகியோரைக்கூறலாம்.

இனி நேரடியாக விடயத்துக்குவருவோம்.

கவிதாயினி தாமரை அவர்கள் கூறியதுபோல ‘ குருதிபிசுபிசுக்கும் ‘

ஈழமண்ணில் நின்று கூத்தடித்தது அந்தக்கொலைகாரக்கூட்டணியான இந்தியாவும்,ஸ்ரீலங்காவும்.

இந்தக்கூட்டணியின் மற்றொருபங்குதாரரான கருணாநிதியும், தமது பங்கிற்கு, தமிழகமண்ணிலேயே ஒருகூத்தை நிகழ்த்திமுடிக்கவிருக்கிறார் என்றவிடயம் அனைவரும் அறிந்ததே!

 அந்தக்கூத்துக்கு, தமிழ்ச்சாயம் பூசப்பட்டிருப்பதால், அதற்கு, தமிழறிஞர்கள் என்று அறியப்பட்டவர்கள் தேவைப்படுகிறார்கள் அவருக்கு.

முக்கியமாக, ஈழமக்களிடையே இன்னமுமே தமக்குச் செல்வாக்கு உண்டென்று காண்பித்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.

இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்பவர்.

ஆரம்பத்தில், இவரும் இந்தச்செம்மொழிமாநாடு இப்போது தேவைதானா? என்று கடுமையான எதிர்ப்பைத்தான் வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஒருசில நாட்களிலேயே, தேவைதான் என்று குத்துக்கரணமடித்து வெளியானது மறுஅறிக்கை.

காரணம் புரியாமல், அதிர்ந்துபோயினர் தமிழுணர்வாளர்கள்.

(ஒருவேளை, இவருக்கானது காலந்தாழ்த்தித்தான் பட்டுவாடா செய்யப்பட்டதோ யார்கண்டார்.)

அதன் தொடர்ச்சியாக, இப்போது புதிய புஷ்வாணம் ஒன்றைவிட்டிருக்கிறது இந்த ஈழத்துப்புல்லுருவி.

‘தமிழீழம் என்பது கருணாநிதியை நம்பித்தொடங்கவில்லையாம் ‘

எப்படி இருக்கிறது ‘ காதுல பூ’ ?

அப்படியானால், யாரைநம்பித் தொடங்கினாராம்?

அதையாவது வெளிப்படையாகச்சொல்லட்டுமே!

இதை நான் கேட்கவில்லை ; தமிழ்மக்கள் கேட்கிறார்கள்..!

ஏனெனில், தொடங்கியவனுக்கு மட்டும்தானே அது தெரிந்திருக்கும்?

ஏதோ, தாம்தான் ஈழப்போரைத்த்தலைமையேற்று இதுவரை நடத்தியவர் போலல்லவா பிதற்றியிருக்கிறார்?

அதுமட்டுமா? “அங்கும் போய் இதைச்சொல்வேன்” என்ற முழக்கம்வேறு!

அதாவது, முழங்கையில் பிடித்து வரவேற்பதுபோல....

தாமும், எம்மைப்போலவே கருணாநிதியின்மீது கோபத்தில் இருக்கிறாராம்.

தாமும் ‘தமிழின உணர்வாளர்’தானாம். இதை நாம் நம்பவேண்டுமாம்.

இவரது இந்தப்பெருங்கோபம், கருணாநிதியை எள்ளளவும் பாதித்ததாகத் தெரியவில்லையே!

‘கோழிமிதித்துக் குஞ்சு சாகாது ‘ என்பார்களே! அது, இதுதானோ?

ஆனால், மற்றொரு பேராசிரியர் - மலேசியநாட்டின் பினாங்கு எனும் மாநிலத்தின் துணைமுதல்வர் டாக்டர்.பி.இராமசாமி அவர்களுக்கு மட்டும் இந்தியாவுக்கான நுழைவு அனுமதியே மறுக்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்தே, இவ்விரண்டுக்குமிடையிலுள்ள வித்தியாசத்தை இலகுவில் அடையாளங்கண்டுகொள்ளலாமே.

ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள் பே...ராசிரியர் அவர்களே!

மக்களை நம்பித்தான் இப்போராட்டம் தொடங்கியது.

அதுவும் , இந்தியாவையோ எந்தவொருவல்லரசையோ நம்பாமல் உலகத்தமிழ்மக்களைமட்டுமே நம்பி, களத்தில் நின்று வீரச்சாவடைந்தனர் நமது வீரத்தமிழ்மறவர்கள்!

உங்களுக்குச்சோறுபோட்ட தமிழுக்காய் உயிர்நீத்த இவர்களுக்கெல்லாம் நீங்கள் காட்டும் நன்றியறிதல் இதுதானா?

இந்த ‘ உலகத்தமிழர் ‘ என்ற பதத்தில் நீங்களும் உள்ளடக்கம்தானே? நீங்களே இப்படிப்பேசலாமா?

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.

தயவுசெய்து, இந்தத் தமிழ்த்துரோகியின் மாநாட்டுக்குப் போவதைத்தவிர்த்துவிடுங்கள்.

இதன்மூலம், தமிழுலகின் நிரந்தரத்துரோகிகள் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறுவதிலிருந்து தப்பிக்கொள்வதற்கானவாய்ப்பு இன்னமும் உண்டு.

அன்புடன்

 சிவம் அமுதசிவம்.