குரங்கிற்குத்தெரிந்த மனித உரிமை

 

இது சிரிக்கவேண்டிய விடயமல்ல; மாறாக, சிந்திக்கவேண்டியவிடயம்.

இக்காட்சியைக் கூர்ந்து அவதானித்தால் , பலவிடயங்களைப்புரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே, அது நன்கு பழகியகுரங்கு. அதிலும், புத்திக்கூர்மையுள்ள வகைகளிலொன்றாகக்கண்டறியப்பட்ட சிம்பன்சி எனப்படும் வகையைச்சார்ந்தது.
இவருக்காகவே பிரத்தியேகமாக அஃதங்கே கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும் இவரை அது , கண்டுகொள்ளவேயில்லை.
”நீ யாராயிருந்தால் எனக்கென்ன ?” என்பதுபோல் வாடியமுகத்துடனேயே காணப்படுகிறது.
இவரோ, அது தன்னை நிமிர்ந்துபார்த்துவிட்டால் அடையாளங்கண்டுகொள்ளும் என்பதுபோல, நீண்டநேரமாக அதற்கு, கைலாகுகொடுத்தும், அதன் முகத்துக்கு நேரேநின்று சிரிப்புக்காட்டியும் அதன் கவனத்தை ஈர்க்கப்பெரும்பாடுபடுகிறார்...
இத்தனையாயிரம் தமிழர்களைக்கொன்றொழித்த மகாபராக்கிரம சூரன் -ராக்‌ஷசபட்சே சகோதரர்களில் ஒருவன் வந்திருக்கிறேன்.....அப்படி இதற்கு என்னைத்தெரியாமலிருக்குமா என்பது போல.
ஒருவேளை அதனிடமிருந்து ஒரு ‘சல்யூட்’ ஐ எதிர்பார்த்திருப்பாரோ என்னமோ.
சாதாரணமாக, குரங்குகள்தாம் தேவையில்லாமல் அடுத்தவர்களைச் சீண்டிக்கொண்டேயிருக்கும். இதனாற்றான், குரங்குச்சேட்டை என்றசொல்லே வந்தது. இதை, ‘ தமிழ்மறவர்’ இணையதளத்தில் ‘நகைச்சுவைக்கணொலி’ இலும் நேயர்கள் காணலாம்.
ஆனால், இங்கோ நிலைமை தலைகீழாகவே காணப்படுகிறது.
பலதடவைகள் இவர் அதன் கைகளைப்பிடித்துக்குலுக்கியும், கையிலேயே கீச்சுமூச்சுக்காட்டியும் செய்த தொந்தரவுகளைச்சகித்துக்கொண்டு, தனக்கு அவரைக்காணவே பிடிக்கவில்லையென்பதை மறைமுகமாக அது உணர்த்தியும்,
புரிந்துகொள்ளாமல், மென்மேலும் தொடர்ந்து இவர் சீண்டிக்கொண்டேயிருந்தமையினாலேயே அது, பொறுமையிழக்கவேண்டியநிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது.
இவ்வளவுபேரில் இவரைமட்டும் அதற்குப்பிடிக்காமற்போனமைக்குக் காரணம் என்னவாயிருக்கும்?
மனித உரிமைகளையே மதிக்கத்தெரியாத இவன் , மிருக உரிமையை எங்கே மதிக்கப்போகிறான் என்று நினைத்ததோ என்னமோ?